தேவையானவை
ராகி 2 கிளாஸ்
சோளம் 1 கிளாஸ்
கம்பு குருணை 1 கிளாஸ்
இட்லி அரிசி 2 கிளாஸ்
உளுந்து 1 கிளாஸ்
வெந்தியம் சிறிது
ஊற வைக்கும்போது :
ராகி, சோளம் சுத்தம் செய்து தனி தனியாக சுமார் 6 மணி நேரம் ஊற வைக்கவும் .
இட்லி அரிசி , உளுந்து, வெந்தியம் வழக்கம் போல தனி தனியாக ஊற வைக்கவும்.
கம்பு குருணை மட்டும் சுமார் 1 மணி நேரம் ஊறினால் போதும் . (அதிக நேரம் ஊறினால் புளிப்பு ரொம்ப இருக்கும் மாவில்) அரைக்கும் போது :
உளுந்து வெந்தியம் முதலில் .. அரைத்து எடுத்து கொள்ளவும்
அடுத்து 15 நிமிடம் சோளம் , சோளம் 3/4 பதம் அறைந்ததும், ராகி ஒரு 10 நிமிடம் கம்பு 10 நிமிடம் கடைசியாக இட்லி அரிசியும் சேர்த்து அரைத்து வழக்கம் போல உப்பு போட்டு கலந்து மாவை புளிக்க வைத்து இட்லி தயார் செய்யவும்.
அதிக நார் சத்து உடன் கூடிய, சுவையான இட்லி தயார்.
No comments:
Post a Comment