Wednesday, January 21, 2026

சாணிபாச கரைசல் – இயற்கை விவசாயிகளுக்கு ஒரு வரம்!

 

🌱 சாணிபாச கரைசல் – இயற்கை விவசாயிகளுக்கு ஒரு வரம்! 🌱
ஒரு முறை தயாரித்தால் போதும்…
👉 பிரைமோர் போல தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய
👉 பல பரிணாமங்களில் வேலை செய்யும்
👉 உயிர்சத்து நிறைந்த உன்னத கரைசல்
🔹 படிநிலை – 1 : பாசம் உருவாக்குதல்
தேவையான பொருட்கள்:
• நாட்டு மாட்டு சாணி ( காலையில் போட்டது ) – 200 கிராம்
• வெல்லம் / கருப்பட்டி – 200 கிராம்
• பயிர் மாவு – 200 கிராம்
(கடலை, கொள்ளு, தட்டைப்பயிறு, பச்சைப்பயிறு, நிலக்கடலை – ஏதாவது ஒன்று)
செயல்முறை:
சாணி + வெல்லம் + பயிர் மாவு
👉 தண்ணீர் சேர்க்காமல் பிசைந்து
👉 பிள்ளையார் பிடிப்பது போல உருண்டைகளாக செய்து
👉 2 நாட்கள் நிழலில் வைக்கவும்
பிறகு
👉 28 லிட்டர் கொள்ளளவு உள்ள வாய் அகன்ற பாத்திரத்தில்
👉 உருண்டைகள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி
👉 நல்ல வெயிலில் வைக்கவும்
13 நாட்களில் ஏடு போல பாசம் உருவாகும்
➡️ இது முதல் படிநிலை
🔹 படிநிலை – 2 : தாய் திரவம் தயாரித்தல்
தேவையான பொருட்கள்:
• ஏடு போல கிடைத்த பாசம்
• தண்ணீர் – 19 லிட்டர்
• வெல்லம் / நாட்டு சர்க்கரை – ½ கிலோ
• புளித்த மோர் (வெண்ணை எடுத்தது) – ½ லிட்டர்
செய்முறை:
👉 20 லிட்டர் கொள்ளளவு பாத்திரத்தில் அனைத்தையும் கலந்து
👉 2 நாட்கள் வெயிலில்
👉 அதன் பின் 11 நாட்கள் நிழலில் வைக்கவும்
✅ தாய் திரவம் தயாராகிவிடும்
🔹 படிநிலை – 3 : தொடர்ச்சியான பயன்பாடு (பிரைமோர் போல)
👉 தாய் திரவம் ½ லிட்டர் முதல் 5 லிட்டர் வரை
👉 200 லிட்டர் பிளாஸ்டிக் பாத்திரத்தில்
👉 வெல்லம் – 2 கிலோ
👉 மோர் – 2 லிட்டர்
5 நாட்களில் பாசனத்திற்கு தயாராகும்
13 நாட்களில் pH = 3
➡️ இதையே மீண்டும் தாய் திரவமாக பயன்படுத்தலாம்
🌿 பயன்பாடுகள்
✅ ஜீவாமிர்தத்தில் கோமியத்திற்கு மாற்றாக
✅ தொழு உரம் மக்க வைக்க
✅ செடிகளுக்கு தெளிப்பு
👉 10 லிட்டர் தண்ணீருக்கு 200 ml
✅ ஏக்கருக்கு
👉 5 லிட்டர் சாணிபாச + 200 லிட்டர் தண்ணீர்
👉 வெல்லம் – 1 கிலோ | மோர் – 1 லிட்டர்
🐛 பூச்சி விரட்டி கசாயம்
• ஆடு தீண்டா செடி
• கசப்பு சுவை உள்ள செடி
• ஒடித்தால் பால் வரும் செடி
👉 ஐந்து வகை இலைகள் (முதல் பத்திலை)
➡️ சாணிபாச கரைசலில் 2–3 நாட்கள் ஊறவைத்து
➡️ 10 லிட்டர் தண்ணீருக்கு 300 ml பயன்படுத்தலாம்
🔥 அக்னி அஸ்திரம்
(கொதிக்க வைக்காமல்)
👉 இதே முறையில் 10 லிட்டருக்கு 300 ml
🌴 தென்னையில் குரும்பை உதிர்வு தவிர்க்க
• எருக்கு செடி – 10 கிலோ
• சாணிபாச கரைசல் – 5 லிட்டர்
• தண்ணீர் – 200 லிட்டர்
5 நாட்கள் ஊறவைத்து
👉 ஒரு மரத்திற்கு 10 லிட்டர்
🌾 கூடுதல் பயன்கள்
✔️ மக்கிய தொழு உரத்துடன் சேர்த்து வேர் வழி ஊட்டம்
✔️ செடிகள் பச்சை கட்டும் (ஹியூமிக் போல் விளைவு)
✔️ வயது முதிர்ந்த கத்தரியில் காய் மென்மை அதிகரிப்பு
✔️ மீன் அமிலம் தயாரிப்பிலும் பயன்படுத்திய அனுபவங்கள்
⚠️ முக்கிய குறிப்பு
🚫 சாணிபாச கரைசலை தண்ணீர் கலக்காமல் நேரடியாக தெளிக்கக் கூடாது
❗ இலைகள் உதிர வாய்ப்பு உள்ளது

No comments:

Post a Comment