Thursday, October 29, 2015

வெற்றிலை நெல்லி ரசம் !



குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.
தேவையான பொருட்கள்:
முழு நெல்லிக்காய் - 10,
வெற்றிலை - 20,
கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி,
காய்ந்த மிளகாய் - 4,
பூண்டு - 6 பல்,
வால் மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
* காய்ந்த மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும்.
* கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* வெறும் சட்டியில் காய்ந்த மிளகாய், பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும்.
* பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். நன்றாக வதங்கியதும் ஆற வைத்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
* ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும்.
* அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
* அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.
* இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும் ஏற்ற உணவாக அமைகிறது.
http://www.maalaimalar.com/

No comments:

Post a Comment