தேவையானவை:
வெற்றிலை – 7,
காய்ச்சிய பால் – 2 கப்,
சப்ஜா விதை – அரை டீஸ்பூன்,
ரோஸ்
சிரப் – சிறிதளவு,
குல்கந்து – 4 டீஸ்பூன்,
நறுக்கிய டிரை ஃப்ரூட்ஸ் – 3
டீஸ்பூன்
(பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர்ந்த அத்திபழம்)
செய்முறை:
வெற்றிலையைக் கழுவி, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மசிய அரைக்கவும். இதில்,
பால், குல்கந்த் சேர்த்துக் கலக்கவும். தண்ணீரில் ஊறவைத்த சப்ஜா விதையைச்
சேர்த்து, ரோஸ் சிரப்பை ஊற்றி, நறுக்கிய டிரை ஃப்ரூட்ஸை சேர்த்து,
குளிரவைத்துப் பரிமாறவும்.
பலன்கள்: வெற்றிலை
வாய் துர்நாற்றத்தைப் போக்கும், பல் ஈறுகளில் உள்ள
நீர் வறட்சியைத்
தடுக்கும். சப்ஜா விதையில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால், ரத்த
சோகை வராமல் காக்கும்.
No comments:
Post a Comment