Wednesday, May 21, 2014

சுக்கு மல்லி காபி..!



உணவை எளிதில் ஜீரணிக்க உதவும்.
சளி வராமல் தடுக்கும்.

பெரிய விருந்துக்குப் பின், சுக்குக் காபி அருந்தலாம்.

மல்லி விதை - 2 டேபிள்ஸ்பூன்,
மிளகு,
காபிதூள்,
சீரகம்,
ஓமம் -
தலா
ஒரு டேபிள்ஸ்பூன், சுக்கு - ஒரு துண்டு,
கருப்பட்டி - தேவையான அளவு, துளசி - கைப்பிடி.

செய்முறை:

எல்லாவற்றையும் இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். தண்ணீரைக் கொதிக்கவைத்து இந்தப் பொடியையும் கருப்பட்டியும் சேர்த்து, 4 நிமிடங்கள் கொதித்த பிறகு கொஞ்சம் துளசியும் சேர்க்கவும். பிறகு இறக்கி, வடிகட்டிக் குடிக்கலாம். விருப்பப்பட்டால், பால் சேர்த்துக்கொள்ளலாம்.
Pasumai Vikatan

No comments:

Post a Comment