Thursday, May 15, 2014

கதம்பக்காய்க் கூட்டு


தேவையானவை: சுரைக்காய், பீர்க்கன், புடலை, மஞ்சள் பூசணி, வெள்ளைப் பூசணி, அவரைக்காய், தக்காளி, கொத்தவரை, காராமணி, சின்ன வெங்காயம் (நறுக்கியது) – 100 கிராம், பாசிப்பருப்பு – 200 கிராம், நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி, கடுகு, உப்பு – சிறிது, உளுந்து, கடலைப் பருப்பு – 2 தேக்கரண்டி,
பச்சைமிளகாய் – 5, மஞ்சள் தூள் – சிறிது, இஞ்சி, பூண்டு விழுது – இரண்டு மேசைக்கரண்டி, கல் உப்பு – தேவையான அளவு.
செய்முறை: எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு இவற்றைத் தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். மற்ற காய்களைச் சேர்த்து வதக்கி, வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பைச் சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்: எல்லாக் காய்கறிகளும் கலந்து இருப்பதால், அனைத்துச் சத்துக்களும் நிறைந்தது இந்தக் கூட்டு. நுண் சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது. தாது உப்புகளும் அதிகம் நிறைந்திருப்பதால் உடலுக்கு எல்லா நன்மைகளூம் கிடைக்கும்.

No comments:

Post a Comment