Thursday, May 15, 2014

சாமைக் காரப் புட்டு


தேவையானவை: சாமை அரிசி மாவு – 500 கிராம், எண்ணெய் – 3 மேசைக்கரண்டி, கடுகு – சிறிதளவு, உளுந்து – ஒரு தேக்கரண்டி, கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி, சீரகம் – ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது) – சிறிதளவு, தக்காளி (பொடியாக நறுக்கியது) – 1, சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 250 கிராம், காய்ந்த மிளகாய் – 4, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: சாமை அரிசி மாவைச் சலித்து, அதனுடன் சீரகம், சிறிது உப்பு கலந்து புட்டு பதத்துக்குப் பிசைந்து, ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிடவும். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு முறையே சேர்த்து, நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும். பின், வேகவைத்த சாமைப் புட்டைச் சேர்த்து நன்கு கலக்கவும். கொத்தமல்லியைத் தூவி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் மூடி வேகவிட்டு எடுக்கவும்.
பலன்கள்: நீராவியில் வேகவைத்த உணவு என்பதால், உடலுக்கு நல்லது. விரைந்து செரிக்கும் தன்மை கொண்டது. காரம் சேர்ப்பதால், மேலும் சுவை அதிகமாகும்.

No comments:

Post a Comment